Skip to main content

Posts

Showing posts from April, 2021

இந்திய முஸ்லிம்களும் - சர்வதேசமும் விழித்துக்கொள்ளவேண்டும்

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, அடக்குமுறைக்கும் , முஸ்லிம்கள் ஆதரவு உள்ளதாக ஒரு மாயா தோற்றத்தை உருவாக்கவே, ஆர் எஸ் எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டது முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் , இது ஆர் எஸ் எஸ்-சின் கிளையமைப்பு, முஸ்லிம்கள் போல் உள்ள போலி முஸ்லிம்களை கொண்டு இயங்கப்படுகிறது. இது rss அமைப்பின் ஒரு கிளையான MRM உடைய ஆட்கள். இந்த அமைப்பின் நோக்கம் இஸ்லாமியர்களே தங்களது செயல்களை ஆதரிக்கிறார்கள் என்ற மாயையை மக்களிடம் பரப்புவதற்குத்தான். MRM பற்றிய விழிப்புணர்வை நமது சமூகத்தில் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.  முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச்  ( MRM)ஒரு பார்வை  ▪️முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்து இந்துத்துவ சித்தாந்தத்தையும், கலாச்சாரத்தையும் முஸ்லிம் சமூகத்திற்குள் திணிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட பேராபத்தான ஒரு அமைப்புதான் முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச். ▪️2002 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று டெல்லியில் வைத்து முதலில் ராஷ்டிரபதி முஸ்லிம் அந்தோளன் என்ற அமைப்பை உருவாக்குகின்றனர்;ராஷ்டிரபதி என்று ஆரம்பிப்பதால் முஸ்லிம்கள் இதனை ஒதுக்க ஆரம்ப...