கா ஷ்மீரில் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் பற்றிய நிகழ்வுகளை பதிவு செய்த “ப்ளட் லீவ்ஸ் இட்ஸ் ட்ரைல்” என்ற ஆவணப்படம் சென்னையில் திரையிடப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த இபாத் பாத்திமா இயக்கி உள்ள இந்த படத்தை, ‘த மிழ் ஸ்டுடியோ படச்சுருள்’ மாத இதழ் திரையிட்டது. ஏற்கனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி உள்ள பாத்திமா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசின் கெடுபிடிகள், ராணுவத்தின் அச்சுறுத்தல்கள், பல இடையூறுகளைத் தாண்டி இந்த படத்தை இயக்கி உள்ளார். திரையுலகினர், கலைத்துறை, மாணவ மாணவிகள் என பல தரப்பினரும் இந்த திரையிடலுக்கு வந்திருந் தனர். வழக்கமாக நாம் பார்த்து பழகிய ஜம்மு காஷ்மீரின் பனிப்பொழிவு பரவசங்கள், அழகு வருணனைகள் என்ற பிம்பங்களை தகர்த்து அத்துமீறலில் தொலைந்துபோனவர்களுக்காக கதறும் உறவுகள், சுதந்திரங் கள், உரிமைகளுக்காக போராடும் மக்கள் கூட்டம், ராணுவத்தின் அடாவடிகள், அங்கு நிலவும் அரசியல் சூழல்கள் என்று குருதி பொழியும் காஷ்மீரை படம் பிடித்திருக்கிறது இந்த ஆவணப்படம். ராணுவத்தினரால் போடப்பட்ட முள்வேலி கம்பிகளுக்குள் இருக்கும் நாய்க்குட்ட...