ஒ ரு காலத்தில் இஸ்லாம், கம்யூனிசம், மார்க்ஸிசம், முதலாளித்துவம், திராவிடம், நாத்திகம், பாசிசம், நாசிசம், இன மொழி மற்றும் மதம் சார்ந்த அரசியல் சிந்தனைப் பரவலாக்கத்தில் மேடைகளும், வீதிப் பேச்சுகளும் மட்டுமே முக்கிய பங்குகள் வகித்தன. ஆனால், மோடி இந்தியாவில் ஹிந்துத்வா இயக்கங்கள் தங்களுடைய ஹிந்து தேசியவாத சிந்தனையை பரப்பும் வகையிலும், அகண்ட பாரதத்தை எதிர்ப்பவரை ஒடுக்குவதற்காகவும் கைகளில் எடுத்த திட்டங்களில் மிகக் கூர்மையான ஆயுதம் பாடசாலைகளை உருவாக்கும் வித்யாலாயா ப்ராஜெக்ட் ஆகும். விபரீதமான வித்யாலயா ப்ராஜெக்ட்: 1. சிசு மந்திர் சேவா பாரதி, வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பாரத் கல்யாண் பிரதிஷ்தான், பாரதீய ஜனசேவா சன்ஸ்தான் ஆகிய கல்வி அமைப்புகளின் தலைமை சங்பரிவார் அமைப்புகளுடன் இணைந்து தங்கள் திட்டங்களை வலுப்படுத்தும் செயல்பாட்டில் இறங்கி உள்ளனர். 2. 2017 ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பள்ளிக்கூடங்கள் உருவாக்கியே தீர வேண்டும் என்பது சங்க பரிவார் அமைப்பின் செயல் திட்டமாக உள்ளது. 3. கான்வென்ட் மற்றும் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை ஒழித்துக் கட்டும் வகையில...