1 7 2022 நீதிபதி சூர்ய கான்ட் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வு, நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, நீதிபதி சூர்ய கான்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாகச் சாடியது. “நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பு; அவர் அவசியம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இரண்டு நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வின் தலைமை நீதிபதி சூர்ய கான்ட், சர்ச்சை கருத்துகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு எஃப்.ஐ.ஆர்.களை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி நுபுர் ஷர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இவ...