Authors கொரோனாவை ஒழிக்க பிரதமர் மோடியின் வேண்டுகோள் தான் மக்கள் ஊரடங்கு.அதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் தங்கள தனிமைப்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பிரதமர் மோடி கோட்டுக் கொண்டுள்ளார். நாம் என்ன செய்ய வேண்டும்? மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளின்றி வேறு தேவைகளுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறுவைசிகிச்சைகளையும் தள்ளி வைக்க வேண்டும் முடிந்தவரை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டும். மாலை 5 மணிக்கு கொரோனாவிற்கு எதிராக 24 மணி நேரமும் பாடுபடும் மருத்துவப் பணியாளர்கள், பாதுக...