ரோஹிங்கியா அகதிகளை நடத்தும் விதமே மோடி அரசின் பாகுபாட்டைக் காட்டுகிறது ரோஹிங்கியா அகதிகளை நடத்தும் விதம், 2015-2016ம் ஆண்டில் திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்த சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது,... ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்புவது, வாழும் உரிமை மற்றும் அரசியலமைப்பின் நெறி ஆகியவற்றை மீறுவதைக் குறிக்கிறது. சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள், மியான்மரின் உயர் அதிகாரிகள், தங்கள் நாட்டின் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஐ.நா-வின் உண்மை கண்டறியும் நடவடிக்கை மற்றும் பல்வேறு அரசியல் தீர்மானங்களை சுட்டிக்காட்டி, கொல்லப்படும், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ரோஹிங்கியாக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மியான்மர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று உலக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு தேவையான குறிபிடத்தக்க அறம் மற்றும் சட்டத்தின் உட்கருத்து உலக நீதிமன்றத்தின் உத்தர...